முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பெட்சீட் வழங்கும் நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர்,

கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பெட்சீட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வீரபாண்டியன்பட்டணம் அன்னை தெரசா மனித நேய இயக்கம் சார்பில் கடந்த 10 வருடமாக கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு ஆதரவற்ற ஏழை எளிய பொதுமக்கள், கணவரால் கைவி டப்பட்ட பெண்கள், முதியோர், ஊனமுற்றோருக்கு கிற்ஸ்துமஸ், புத் தாண்டு அன்பளிப்பு மற்றும் மருத்துவமுகாம், கல்வி பரிசு வழங்கப் பட்டு வருகிறார்கள். அதைபோல் இந்த வருடம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளி 100 பேருக்கு பெட்சீட் வழ ங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வீரபாண்டியன்பட்டணம் பங்குதந்தை ஆன்ட்ரூஸ்டிரோஸ் தலைமை வகித்து நோயாளிகளு க்கு பெட்சீட் வழங்கினார். இதில் தலைமை மருத்துவர் பொன்ரவி, மனித நேய இயக்க தலைவர் பெயிட்டல்லோபோ, உப தலைவர் மனுவேல்ராயன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கில்டா, லதா, ஜெயராணி, தீபக், பிரபு, ஜெனிகரா, லோபினா, ஆஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்