முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையினர் தின உரிமைகள் தின விழாவில் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 465 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கதிரவன் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி,

 

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பாக சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கலெக்டர் சி.கதிரவன்  தலைமையில் நேற்று (23.12.2016) நடைபெற்றது. இதில் பிற்பட்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பாக சிறுபான்மையினர் நல  அலுவலர் .ம.வசந்தா அனைவரையும் வரவேற்றார்.  வழக்கறிஞர் சாதிக், ஐ.இ.எல்.சி. திருச்சபை செயலர் ஸ்டாவின், சுன்னத் சமாஞ் தலைவர் எம். சாப்ஜன், கைட் அறக்கட்டளை செயலர் அப்துல் உன்னப், தர்கா கமிட்டி செயலர் சையத் நசீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நலத்திட்ட உதவிகள்

பின்பு கலெக்டர் நல திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றும் போது:

தமிழக அரசு சிறுபான்மையினர்  மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு வகையான தொழில் பயிற்சிகளையும், கடனுதவிகளையும் வழங்கி வருகிறது.   பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்  தொகை, பள்ளி மேற்படிப்பு உதவித் தொகை, உருது மொழி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாநில அளவில் பரிசுகள், முஸ்ஸீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள முஸ்ஸீம் சமுதாயத்தை சார்ந்த மகளிருக்கு தொழில் பயிற்சி  மற்றும் கடனுதவிகளும், உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியத்தின் சார்பாக பொருளாதார நல த்திட்ட உதவிகள்  உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசு வழங்கி வருகிறது. இது குறித்த கையேட்டினை அனைவரும் பெற்று பயனடைய வேண்டும் .

மேலும் சிறுபான்மையினர்  அமைப்பின் சார்பாக தௌலாதாபாத் அருகில் உள்ள உருது பள்ளி கட்டிடம் சீரமைக்கவும்,  கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொடுக்கவும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை  ஏற்று அப்பள்ளிக்கு அனைவருக்கும் கல்வி திட்ட நிதியின் கீழ் புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  நமது மாவட்டத்தில் 12 ம் வகுப்பு மற்றும் 10 வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு தொகையாக ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 1000  என 13 மாணவ மாணவியர்களுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பில் காசோலைகளையும், ஒரு நபருக்கு ரூ. 3 ஆயிரத்து 465 மதிப்பிலான தையல் இயந்திரத்தையும், கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி சார்பாக டாம்கோ தனி நபர் கடனுதவியாக 9 நபர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 90 ஆயிரம் மதிப்பில் மாங்காய் வியாபாரம், துணி வியாபாரம், ஆட்டோ தொழில், தேனீர் கடை, மற்றும் தோல் வியாபாரம் செய்ய தனி நபர் கடனுதவிகளை  இன்று வழங்கப்படுகிறது. இந் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைவேண்டும் என கலெக்டர் சி.கதிரவன்  பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் நேர் முக உதவியாளர் ( பொது) .தா.சாந்தி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்  முகமது அஸ்லாம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், துணை பதிவாளர்கள் ரவிசந்திரன், பாலமுருகன், மாவட்ட கல்வி அலுவலர்  அகமது பாஷா, ஐ.இ.எல்.சி. திருச்சபை  பங்கு தந்தை  செயின்ட். பால் லுர்தன், ஜாமிய மசூதி தலைவர் அமீர் பாஷா,உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்