முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு பயிர் கடன் உத்தரவை எம்எல்ஏ சி.சந்திரசேகரன். வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      நாமக்கல்

நாமக்கல்,

 சேந்தமங்கலம் புதிய பேருந்து நிலையம் இன்னும் 15 நாட்களில் செயல்பட தொடங்கும் என எம்எல்ஏ சி.சந்திரசேகரன் உறுதியளித்தார்.  சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதிகளி்ல் உள்ள 18 வார்டுகளிலும் பொதுமக்களிடம் அவர் வியாழக்கிழமை குறைகளை கேட்டறிந்தார். தெரு விளக்கு, குடிநீர், கழிப்பிடம், நியாயவிலைக்கடை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், ஆய்வு செய்து தேவையின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறந்த பேருந்து நிலையத்தில், சில பணிகள் இன்னும் முடியவில்லை. இன்னும் 15 நாட்களில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பேருந்து நிலையத்திற்குள், பேருந்துகள் சென்று வர அனுமதிக்கப்படும் என்றார்.   மேலும் சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம்  79 பேருக்கு ரூ.66.04 லட்சம் மதிப்பிலான பயிர்க்கடனை எம்எல்ஏ வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்