முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ராணுவத்தின் உயர் தொழில் நுட்பங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் - வரைவு பட்ஜெட்டுக்கு ஒபாமா ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க பாதுகாப்புத் துறையின் 2017-ம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட்டுக்கு அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் அமெரிக்காவின் நெருங்கிய பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியாவை அங்கீகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வரைவு பட்ஜெட் :

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பரில் அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்புத் துறை வரைவு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வரைவு பட்ஜெட் கடந்த 9-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்தார். இதில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.41,92,256 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் அமெரிக்காவின் நெருங்கிய பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியாவை அங்கீகரிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்க ராணுவத்தின் உயர் தொழில் நுட்பங்கள் இந்தியாவுக்கு கிடைக் கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக் கைக்காக பாகிஸ்தானுக்கு ரூ.8140 கோடி நிதியுதவி அளிக்க பட்ஜெட்டில் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. ஆனால் அமெரிக் காவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நிதியுதவி அளிக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்