முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையான இந்திய மீனவர்கள் 220 பேர் தாயகம் திரும்பினர்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

 இஸ்லாமாபாத்   - இந்திய மீனவர்கள் 220 பேரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்யப்பட்டபின் தாயகம் திரும்பினர்.எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைகளால் இரு தரப்பு உறவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நல்லெண்ண நடவடிக் கைக்கான அறிகுறியாக இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சகம் விடுவித்துள்ளது. பாகிஸ்தான் கடல் எல்லைக் குள் சட்டவிரோதமாக நுழைந்து, மீன் பிடித்ததாக கைது செய்யப் பட்டு, மாலிர் சிறையில் அடைக்கப் பட்டிருந்த மீனவர்கள் 220 பேரும் கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

அங்கிருந்து லாகூருக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள், வாகா எல்லையில் இந்திய அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறை கண்காணிப்பாளர் ஹசன் சேத்தோ தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்பினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்