முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

41அடி உயரமுள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்திவிழா : 1,08,000 வடைமாலை தயாரிக்கும் பணியில் பக்தர்கள்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      சென்னை
Image Unavailable

சென்னையில் பிரசித்திபெற்ற திருக்கோவில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீநவக்கிரகநாயகி அன்னை கருமாரி அம்மன் திருக்கோவில் ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 7எச்-பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் அனுமன் ஜெயந்திவிழாவை முன்னிட்டு அருள்புரிந்து வரும் 41அடி உயரமுள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு 29-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சிறப்பு யாகப்பூஜையும், மூலவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். உற்வர் சுவாமி ரதத்தில் ஆலயத்தை வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்துதருள்கிறார். அன்னதானமும் நடைபெறுகிறது. மாலையில் 41அடி உயரமுள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு; 1இ08இ000 (ஒரு லட்சத்தி எட்டாயிரம்) வடைமாலை, ஜங்கிரிமாலை, லட்டுமாலை, வெற்றிலைமாலை. துளசிமாலை, தேங்காய்மாலை, வாழைப்பழம்மாலை, எலுமிச்சைமாலை, சாத்துகுடிமாலை ஆகிய மாலைகளை சுவாமிக்கு சாற்றி மேளதாளங்களுடன், மந்திரங்கள் முழங்க மகாதீபாரணையும், சிறப்புப்பூஜைகளும் நடைப்பெறுகிறது. மட்டைதேங்காய் பிராத்தனை வேண்டி கட்டுதல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. அனுமன் ஜெயந்திவிழாவை முன்னிட்டு திருக்கோவிலில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் ஆன்மிக குழுவினர்கள் தீவிரமாக விழாவிற்கு தேவையான மாலைகள் தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் 41அடி உயரமுள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு அணிவிக்கும் மாலைகள் அனைத்துக்கும் தேவையான பொருட்களை தந்து சுவாமியின் அருளாசி பெறவேண்டியும், பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொள்ளும்படியும் விழா ஏற்பாடுகளை செய்து வரும் திருக்கோயில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்