முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூரில் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தலைமையில் நேற்று (26.12.2016) நடைபெற்றது.

 

பட்டா

 

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 364 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர் , இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், வோளாண்மைத்துறையின் சார்பில் அரியலூர் வட்டாரம் மேற்கு சீனிவாசபுரம் மற்றும் நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்த 2 குழுக்களுக்கும், செந்துறை வட்டாரத்தில் அசாவீரன் குடிக்காடு மற்றும் சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த 2 குழுக்களுக்கும் சுழல் நிதியாக குழு ஒன்றிற்கு தலா ரூ.10,000-வீதம் மொத்தம் 4 குழுக்களுக்கு ரூ.40,000-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சி;த்தலைவர் எ.சரவணவேல்ராஜ், வழங்கினார்.

இக்கூட்டத்தில், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத் திட்டம்) மங்கலம், வோளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்