Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : வருகிற 30 ம் தேதி நடக்கிறது

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் வருகிற 30ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரகம் பெருந்திட்ட வளாகம், தஞ்சாவூரில் கீழ்தளத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ஆ. அண்ணாதுரை, தலைமையில் நடைபெறவுள்ளது

 

 

திட்ட விளக்கம்

 

இக்கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்;க பிரதிநிதிகள் அனைவரும் நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம்,. வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள்;, முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, அறிவுறுத்தியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்