முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திடீர் இடமாற்றம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஈரோடு தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த பாலாஜி சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஈரோடு மதுவிலக்கு பிரிவுக்கும், கன்னியாகுமரி மாவட்ட குற்றப் பதிவேடுகள் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ராஜவேலு பணியிடை மாற்றம் செய்யப்பட்டு ஈரோடு மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.காங்கயத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சந்தானபாண்டிக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர், ஈரோடு மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மதுவிலக்குப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த மோகன் நவாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்குப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்