முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட 105 கோரிக்கை மனுக்கள்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      நீலகிரி

 

          நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (26.12.2016) மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர்.  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 105 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

நடவடிக்கை

          பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர். அவர்களிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  மாவட்ட கலெக்டர்  உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர்.  அறிவுறுத்தினார்.

                இந்நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர் (மனுக்கள்) பரமசிவம், உதவி ஆணையர் (கலால்) முருகன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரத்னம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மகபூப் பாட்சா, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்