முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் புதிய ஏஎஸ்பி பதவியேற்பு

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      திருவண்ணாமலை

ஏஎஸ்பியாக ரவாளி பிரியா கந்தப்புனேனி நேற்று பதவியேற்றுக் கொண்டார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவாளி பிரியா கந்தப்புனேனி. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு சென்னை வண்டலூரிலுள்ள தமிழ்நாடு காவல் பயிற்சி பள்ளியில் அடிப்படை பயிற்சி பெற்றார். பின்னர் கடந்த 6 மாதமாக திண்டுக்கலில் காவல்நிலைய பயிற்சி பெற்றுவந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தற்போது திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவிலுள்ள காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று அங்கு காவல் உதவிகண்காணிப்பாளராக ரவாளி பிரியா கந்தப்புனேனி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு திருவண்ணாமலை நகர காவல்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago