முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் தையல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      தேனி

போடி : தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் பெண் தையல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

போடிநாயக்கனூர் பக்த சேவா தெருவை சேர்ந்த சுரேஷ் என்பருக்கும் மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாலதி (35) என்பவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி போடியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாலதி மூல நோயினால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சை பெற்றும் மூலநோய் தீராததால் மனமுடைந்த மாலதி சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாலதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மாலதியின் தம்பி விக்னேஷ்குமார் (27) கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்