முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பைஞ்ஞீலியில் கிறிஸ்துமஸ் பெருவிழா

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலி கிறிஸ்து இயேசு சபையில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது.

 

இயேசு பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் நாள் இயேசு கிறஸ்து பிறந்த நாளை முன்னிட்டு திருப்பைஞ்ஞீலி கிறிஸ்து இயேசு சபையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்து இயேசு சபை போதகர் ஜான்சன் பிரபாகர் அனைவரையும் வரவேற்றார். போதகர்கள் ராபின்சன், ஜான்ஆறுமுகம், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

விழாவில் டிரான்ஸ்பாம் இந்தியா மனிஸ்ட்ரி நிர்வாகி ரெவரன்ட் டாக்டர் ஜஸ்டின் திமோத்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இயேசு பிறப்பு பற்றிய கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். போதகர் மேசியாதாசன் மூலம் ஒரு பெண்ணுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கப்பட்டது. விழாவில் போதகர்கள் பீட்டர் கோவந்தராஜ், ஏனோக், ஆண்ட்ரூஸ், ஜோசப் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பைஞ்ஞீலி கிறிஸ்து இயேசு சபையினர் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்