எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் ஒன்றியம், குருங்குளம் கிழக்கு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்தியாளர் பயணம்
செய்தியாளர் சுற்றுப்பயணத்தில் செய்தியாளர்களிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம் கிழக்கு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 7 ஏக்கரில் 2013-2014 நிதியாண்டில் பசுமை மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் கீழ் ரூ.1.34 இலட்சம் மதிப்பீட்டில் 3.5 ஏக்கர் பரப்பளவில் பழம் தரும் மர வகைகளான மாகன்று 200, சப்போட்டா 167, கொய்யா 27, பழ 28, புளிய மரம் 80, நெல்லி 4, மூங்கில் 80, தேக்கு 300, என ஆக மொத்தம் 886 2015-16 நிதியாண்டில் 6 இலட்சம் மதிப்பீட்டில் 3.5 ஏக்கர் பரப்பளவில் வேங்கை, கோங்கு, செம்மரம், கருமருது, பிள்ளைமருது போன்ற 2000க்கு மேற்பட்ட மர வகைகளும், ஆழ் குழாய் கிணறும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 30 தேனீ கூண்டுகள் அமைக்கப்பட்டு பழ வகைகளுக்கு தேவையான மகரந்த சேர்க்கைக்கும் தேன் சேகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கிராமப்புறத்தில் பசுமை பெருவதன் மூலம் சுற்றுப்புற சூழலும் பாதுகாக்கப்படுகின்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமையில் மூலம் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் 7014 பயனாளிகளுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் ரூ.99.88 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. தாய் திட்டத்தில் குறைந்தபட்ச அடிப்படை தேவைப்பணிகள் 1525 எண்ணிக்கையில் ரூ.34.28 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 119 பணிகள் ரூ.37.50 கோடி மதிப்பீட்டில் கிராமப்புறங்களில் உள்ள மண் சாலைகள் அல்லது பழுதடைந்த சாலைகள் பிரதான சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க ஃ நடுநிலைப்பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடம், சத்துணவு கூடம், குடிநீர் வசதி, சுற்றுச் சுவர் மற்றும் கழிவறை வசதிகள் செய்தல் போன்ற 478 பணிகள் ரூ.6.03 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரக பகுதிகளில் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்திட 1,17,302 எண்ணிக்கையிலான பணிகள் ரூ.140.76கோடி மதிப்பீட்டில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டு, பொது சுகாதாரத்தை பாதுகாத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 486 பணிகள் ரூ.19.78 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்ட நிதியிலிருந்து 204 பணிகள் ரூ.12.47 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் பயன்பாட்டிற்கும், ஊரக பகுதி இளைஞர்களின் உடல் திறன் மேம்பாட்டிற்கும், அம்மா பூங்காக்கள் மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடங்கள் 15 எண்ணிக்கையில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாடு திட்டம் இரண்டின் கீழ் கிராம புறங்களின் நீர் ஆதாரத்தினை மேம்படுத்திடவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், சிறு பாசன ஏரிகள் மேம்பாடு செய்தல், கிராமப்புற சாலைகள் மேம்பாடுஃ வலுப்படுத்துல்ஃ புதுப்பித்தல் செய்தல் மற்றும் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளாகிய குடிநீர் வசதி, தெரு விளக்கு, பொது மக்கள் வசிப்பிட தெருக்கள் மற்றும் சந்துகள் மேம்பாடு ஆகிய பணிகள் ரூ.25.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, சாமிநாதன், ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் போ.சுருளிபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்சுலின் மறுக்கப்படுவதாக புகார்: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக திகார் சிறை முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
22 Apr 2024புதுடெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி டெல்லி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
அருணாச்சல பிரதேசத்தில் எட்டு வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
22 Apr 2024புதுடெல்லி : அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேச்சு: பிரதமருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்., புகார்
22 Apr 2024புதுடில்லி, ராஜஸ்தானில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாரளித்துள்ளது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
2026 சட்டசபை தேர்தலில் போட்டி: நடிகர் விஷால் திடீர் அறிவிப்பு
22 Apr 2024சென்னை : 2026ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.