முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் விபத்தில் உயிரிழக்கும் ரூ8 லட்சம் இழப்பீடு அறிவிப்பு:ரயில் பயணி சங்கம் வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      வேலூர்

 

அரக்கோணம்: ரயில் விபத்தில் உயிரிழக்கும் குடும்பத்தாரிடம் ரூ4 லட்சத்திலிருந்து ரூ8 லட்சம் இழப்பீட்டு தொகையாக வழங்கபடும் என்கிற அறிவிப்பை அரக்கோணம் ரயி;ல் பயணிகள் சங்கம் வரவேற்று உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில் ரயி;ல் பயணி சங்கம் தலைவர் நைனா மாசிலாமணி, பொதுசெயலாளர் ஜே.கே.ரகுநாதன், செய்தி தொடர்hளர் முனிபிரசாத், பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் கூட்டாக கூறியிருந்தாவது. இந்தியா ரயில் இயக்கத்தின் போது பல பெரிய விபத்துக்கள் ஊழியர்களின் கவன குறைபாடுகளினாலும், இயந்திர பழுதுகளாலும்; ஏற்படுவது வாடிக்கை எனவே, இதுபோல் உருவாகும் பல பெரிய விபத்துக்களில் பலர் உயிரிழக்கிறார்கள். ; அவ்வபோது எற்படும் இது போன்ற விபத்துக்களில் உயிர் பரிகொடுக்கும் உறவினர்கள் பெரிய அளவில் பொருளாதார பாதிப்ப்pற்கு தள்ளபடுகிறார்கள் எனவே, கொடுக்கப்படும் 4லட்சம் ரூபாய் இழப்பீட்டை அதிகமாக்கி தரவேண்டும் என அகில இந்திய அளவிலும், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் சார்பிலும் கோரிக்கை விடுத்து வந்தோம். அதன்பயனாக இன்று ரயில்வே நிர்வாகம் ரூ8 லட்சம் இழப்பீட்டு தொகையை உயர்த்தி கொடுக்க முன்வந்துள்ளது இதனை வரவேற்கிறோம். இதற்காக ரயில்;வே அமைச்சகத்தையும். சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து கொள்கிறோம் இவ்வாறு பத்திரிகை செய்தியில் இவ்வாறு கூறியிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்