முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையத்தில் நகர அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த பேருந்தில் பயணம்.

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம் :  ராஜபாளையம் அதிமுக நகர் கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு அரசு பேருந்துகளில் கட்டணம் செலுத்தி அதிமுக தொண்டர்கள் பலர் சென்னை நோக்கி புறப்பட்டனர்.புறப்படுகையில் நகர் கழக செயலாளர் பாஸ்கரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணியராஜா, அண்ணா தொழிற்சங்க குருசாமி, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் மணிகண்டராஜா,அறங்காவல் குழு மாரியப்பன் ஆகியோர் கட்சி தொண்டர்கள் சென்னையில் அமைந்துள்ள மறைந்த முதல்வரின் சமாதியில் அஞ்சலி செலுத்த வழியனுப்பி வைத்தனர்.

பேருந்துகளில் வழிநடத்தி செல்ல கராத்தே ஆறுமுகம், பாஸ்கரன், முருகானந்தம், திருப்பதி மற்றும் பொருப்பாளர்களாக செயல்பட்டனர்.பயணம் செல்லும் கழக தொண்டர்களுக்கு உணவு, மற்றும் ரொக்க பணமும் நகர் கழக செயலாளர் பாஸ்கரன் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்