முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      திருநெல்வேலி

நெல்லை

 

புளியரையில் நடத்திய வாகன சோதனையில் பைக்கில் கேரளாவிற்கு கொண்டு சென்ற ரூ.40 லட்சம் புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

நெல்லை மாவட்டம் புளியரை வழியாக செல்லும் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா நோக்கி சென்ற பைக் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது பைக்கில் சாக்கு மூட்டை இருந்தது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் கேட்டதற்கு பைக்கில் வந்த இருவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதனுள் புதிய 2000, 500 நோட்டுகள் மற்றும் பழைய 100 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இவற்றை எண்ணிப் பார்த்த போது மொத்தம் ரூ.40 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதற்கு முறையான எவ்வித ஆவணமும் இல்லை. இப்பணம் கேரளா மாநிலம் பத்மநாபபுரத்திற்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.

 

மேலும் பைக்கில் வந்தவர்கள் குற்றாலத்தில் சிப்ஸ் கடை வைத்திருக்கும் சஜிஜான் (49), அன்னமராஜா (38) என தெரியவந்தது. இதுகுறித்து வருமானவரித்துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ரூ.40 லட்சம் மற்றும் அதனை கொண்டு வந்த இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்