முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க இஸ்ரேல் அட்டார்னி ஜெனரல் உத்தரவு

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

ஜெருசலேம் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீதான இரு ஊழல் வழக்குகளை விசாரிக்கும்படி அந்நாட்டின் தலைமை அட்டார்னி ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு
ஜெர்மனி நாட்டில் இருந்து நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியதில் ஊழல் செய்து பண ஆதாயம் அடைந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை அவர் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.

விசாரிக்க உத்தரவு
இந்நிலையில், நீர்மூழ்கி கப்பல் ஊழல் மற்றும் விபரம் வெளியிடப்படாத மற்றொரு ஊழல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்குப்பதிவு விசாரணையை தொடங்குமாறு அந்நாட்டின் தலைமை அட்டார்னி ஜெனரல் அலுவலகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்