முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா தேர்வு: ராமநாதபுரத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      ராமநாதபுரம்
Image Unavailable

 

.தி.மு.. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு..வினர் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

 

 

 

 

 

 

 

.தி.மு.. பொதுச்செயலாளராகவும், முதல்அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் இறந்ததை தொடர்ந்து அ.தி.மு.. பொதுச்செயலாளராக அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அ.தி.மு..வினர் உற்சாகமடைந்து ஆங்காங்கே பட்டாசுகளை வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு..வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜி.எம்.ஸ்டாலின்ஜெயச்சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் பாரதிநகரில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில், மண்டபம் ஒன்றிய அம்மா பேரசை இணை செயலாளர் சண்முகபாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர்அணி துணை தலைவர் வெற்றி, சேதுபதிநகர் அம்மா பேரவை செயலாளர் முத்து, பாரதிநகர் கிளை செயலாளர் செல்வராஜ், மருதுபாண்டியர்நகர் வேலவை பிரதிநதி சீனிவாசன், வாலாந்தரவை கூட்டுறவு வங்கி துணை தலைவர் கார்த்தி, ஓம்சக்திநகர் கிளை பிரதிநிதி குமரேசன், செல்வகுமார், பட்டணம்காத்தான் ரவி, 1-வது வார்டு குமார் உள்பட ஏராளமான அ.தி.மு..வினர் திரளாக கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

இதேபோல, ராமநாதபுரம் மாவட்ட மாணவரணி சார்பில் அ.தி.மு.. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் அ.தி.மு..வினர் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்ப பிரிவ மாவட்ட செயலாளர் சரவணக்குமார், மாணவரணி நிர்வாகிகளான மாவட்ட துணை தலைவர் சுரேஷ், நகர் செயலாளர் காளிதாஸ், ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், நகர் தலைவர் சவுந்தரபாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் முத்துக்குமார், சத்தீஸ்வரன், சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் அ.தி.மு..வினர் அந்தந்த பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும், .தி.மு..வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து நகர் முழுவதும் பேனர்கள், போர்டுகள் வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்