முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார்நிலை அலுவலர்களுக்கான வருடாந்திர புத்தாக்க பயிற்சி ஊட்டியில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது

                                    புத்தாக்க பயிற்சி

கூட்டுறவுத்துறையில் சார்நிலை அலுவலர்களுக்கான வருடாந்திர பயிற்சி முகாம் சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கூட்டுறவாளர்கள் விருந்தினர் விடுதி அரங்கில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் முகமது மீரான், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பார்த்திபன், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் நீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                                      கூட்டுறவு சட்டங்கள்

இம்முகாமில் அரசு வழக்கறிஞர் நஞ்சுண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவுகளான 81,82,90 மற்றும் இதர பிரிவுகளின் சட்டங்கள் குறித்தும், கூட்டுறவு சட்டங்கள் மற்றும் விதிகள், கூட்டுறவு அதிகாரிகளால் சங்கங்களில் விசாரணை மற்றும் ஆய்வு நடத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய சட்டவிதிமுறைகள் மற்றும் அவர்களது அதிகாரங்கள், பொறுப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து கூட்டுறவுத்துறை அலுவலர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்து ஆலோசனைகளை வழங்கினார்.

                         ஏற்பாடுகள்

 இப்பயிற்சியில் கூட்டுறவுத்துறை  அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சந்தியா, துணைப்பதிவாளர் அலுவலக தலைமை எழுத்தர் அரசு ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்