முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் : பெற்றோர் மீது வழக்குப்பதிவு

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      திருநெல்வேலி

நெல்லை

ஆலங்குளத்தில்ப ள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் புதுமாப்பிள்ளை மற்றும் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்..

இது குறித்து விபரம் வருமாறு-நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையைச் சேர்ந்தவர் ராமலட்சுமி.. இவரது மகள் சரண்யா (16), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்..இந்நிலையில் சரண்யாவுக்கும், குருவன்கோட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (21) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.. கடந்த நவம்பர் மாதம் முக்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி பார்வதிக்கும் பால கிருஷ்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.. திருமணமான மாணவிக்கு 16 வயதே ஆவதாக கூறப்படுகிறது..இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிறுமிக்கு திருமணம் நடத்தப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட சமூகநலத் துறைக்கு புகார் செய்தார்.. உடனடியாக மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி முத்துலட்சுமி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்..அப்போது பிளஸ்-1 படித்து வந்த 16 வயதே ஆன மாணவிக்கு திருமணம் நடத்தி வைத்தது தெரியவந்தது..

                          இதுகுறித்து அவர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.. பெண் போலீசார் குருவன்கோட்டைக்கு விரைந்து சென்று சரண்யாவை மீட்டு நெல்லையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.. தொடர்ந்து பாலகிருஷ்ணன், அவரது பெற்றோர் மாரியப்பன், தெய்வக்கனி, மாணவியின் தாயார் ராமலட்சுமி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்