முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் எதிரே அனாதையாக நின்ற 2 மர்ம கார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 12ந் தேதி நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கார்களில் வரும் பக்தர்கள் தங்களது கார்களை ராஜகோபுரம் முன்பு உள்ள பார்க்கிங்கில் நிறுத்துவது வழக்கம். அதன்படி ராஜகோபுரம் முன்பு கடந்த ஒரு மாதமாக தமிழகம் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கருப்ப வெள்ளை நிறம் கொண்ட 2 மர்ம கார்கள் நின்றுகொண்டிருந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல்துறைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நேற்று திருவண்ணாமலை நகர காவல்துறை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு அனாதையாக நின்றுகொண்டிருந்த 2 கார்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த கார்கள் யாருடையது? ஏன் இங்கு நிறுத்தி சென்றார்கள்? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்