எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பி.எஸ்.என்.எல். 4ஜி அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? என்று பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா விளக்கம் அளித்தார்.
பி.எஸ்.என்.எல்.லில் 144 ரூபாய் புதிய சிம் கார்டு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அண்ணாசாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கி புதிய சிம் கார்டை அறிமுகம் செய்துவைத்தார்.இதில், தமிழக தொலைபேசி வட்ட தலைமை பொது மேலாளர் பூங்குழலி, சென்னை தொலைபேசி வட்ட தலைமை பொது மேலாளர் கலாவதி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் தொலை தொடர்பு நிறுவனங்களில் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது பி.எஸ்.என்.எல். தான். சமீபத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ‘வார்தா’ புயல் சூறையாடியது. அந்த சமயத்தில் பிற தொலை தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் பி.எஸ்.என்.எல். ஒருவரையொருவர் தொடர்புகொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்ததை பார்க்க முடிந்தது.பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2002-2006-ம் ஆண்டுகளில் அதிநவீன வளர்ச்சி காரணமாக 2006-ம் ஆண்டில் முதல் இடத்தை பிடித்தது. அதன்பின்னர், 2006-2012 வரை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. இதனால் வருவாய் ரீதியாக பெரும் பின்னடவை சந்திக்க நேர்ந்தது.2012-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு புதிய சேவைகளை கொண்டுவந்து முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். தற்போது 30 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்களை வைத்து இருக்கும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். தான்.
மேலும் 15 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.சில ஆண்டுகளாக சிறப்பான சேவைகள் மூலம் கொஞ்சம் லாபம் கிடைத்து இருக்கிறது. பல்வேறு விரிவாக்க பணிகள், புது சேவைகள், இழப்புகளை தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் 2018-2019-ம் ஆண்டில் எங்களுடைய நிகர லாபத்தை அதிகரிக்க திட்டம் தீட்டி இருக்கிறோம்.
தற்போதுள்ள சூழ்நிலையில் தொலை தொடர்பு துறையில் பல்வேறு விதமான போட்டிகள் நிறைந்துள்ளன. பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாக 270 டெரா பைட்சில் இருந்து 340 டெரா பைட்ஸ் அளவுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்யும் வகையில் சேவைகளை விரிவாக்கம் செய்து இருக்கிறோம்.தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாக பல்வேறு சிறப்பு சலுகைகளை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினோம்.
இந்த சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நாடு முழுவதும் புதிதாக 1.5 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களையும், 22 லட்சம் செல்போன் வாடிக்கையாளர்களையும் பெற்று இருக்கிறோம்.தமிழ்நாட்டில் 56 ஆயிரம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம். நவம்பர் 8-ந் தேதிக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக நாங்களும் பி.எஸ்.என்.எல். ‘பில்’ தொகையை செலுத்த ‘சுவைப் மெஷினை’ வினியோகித்து வருகிறோம்.‘மோடி கேஷ்’ என்ற ‘மொபைல் வாலட்’ ஸ்மார்ட் போன்களில் மட்டுமல்லாது, சாதாரண மொபைல் போன்களிலும் உபயோகப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. தொலை தொடர்பு கோபுரங்கள் பகிர்ந்தளித்தல் மூலம் ரூ.222 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது. இதில் 8 சதவீதம் தொலை தொடர்பு உரிமத்துக்கு வரி கட்ட வேண்டி இருப்பதால் சில நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது.
அதுவே தொலை தொடர்பு கோபுரங்களை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் மூலம் தனியாக தொழிற்சாலை அமைத்து தயாரிக்கும் திட்டம் குறித்து மத்திய அமைச்சகத்திடம் பேசினோம். இந்த பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்கள் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதை காரணமாக வைத்து தனியார் நிறுவனமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மாற்றிவிடுவார்கள் என்று அவர்கள் அச்சம் காட்டுகின்றனர். ஊழியர்களிடம் கலந்தாலோசித்து பேசி இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
‘பி.எஸ்.என்.எல். 4ஜி’ அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? என்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அனுபம் ஸ்ரீவஸ்தவா, ‘அடிப்படை கட்டமைப்பு வசதி, பொருளாதார பிரச்சினை காரணமாக தான் காலதாமதம் ஏற்படுகிறது. வை-பை, ‘ஹாட் ஸ்பாட்’ மூலம் ‘4ஜி’ சேவையை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறோம். 2018-ம் ஆண்டுக்குள் ‘4ஜி’ சேவையை முழுவதுமாக வழங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள