எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பி.எஸ்.என்.எல். 4ஜி அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? என்று பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா விளக்கம் அளித்தார்.
பி.எஸ்.என்.எல்.லில் 144 ரூபாய் புதிய சிம் கார்டு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அண்ணாசாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கி புதிய சிம் கார்டை அறிமுகம் செய்துவைத்தார்.இதில், தமிழக தொலைபேசி வட்ட தலைமை பொது மேலாளர் பூங்குழலி, சென்னை தொலைபேசி வட்ட தலைமை பொது மேலாளர் கலாவதி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் தொலை தொடர்பு நிறுவனங்களில் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது பி.எஸ்.என்.எல். தான். சமீபத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ‘வார்தா’ புயல் சூறையாடியது. அந்த சமயத்தில் பிற தொலை தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் பி.எஸ்.என்.எல். ஒருவரையொருவர் தொடர்புகொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்ததை பார்க்க முடிந்தது.பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2002-2006-ம் ஆண்டுகளில் அதிநவீன வளர்ச்சி காரணமாக 2006-ம் ஆண்டில் முதல் இடத்தை பிடித்தது. அதன்பின்னர், 2006-2012 வரை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. இதனால் வருவாய் ரீதியாக பெரும் பின்னடவை சந்திக்க நேர்ந்தது.2012-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு புதிய சேவைகளை கொண்டுவந்து முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். தற்போது 30 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்களை வைத்து இருக்கும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். தான்.
மேலும் 15 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.சில ஆண்டுகளாக சிறப்பான சேவைகள் மூலம் கொஞ்சம் லாபம் கிடைத்து இருக்கிறது. பல்வேறு விரிவாக்க பணிகள், புது சேவைகள், இழப்புகளை தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் 2018-2019-ம் ஆண்டில் எங்களுடைய நிகர லாபத்தை அதிகரிக்க திட்டம் தீட்டி இருக்கிறோம்.
தற்போதுள்ள சூழ்நிலையில் தொலை தொடர்பு துறையில் பல்வேறு விதமான போட்டிகள் நிறைந்துள்ளன. பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாக 270 டெரா பைட்சில் இருந்து 340 டெரா பைட்ஸ் அளவுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்யும் வகையில் சேவைகளை விரிவாக்கம் செய்து இருக்கிறோம்.தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாக பல்வேறு சிறப்பு சலுகைகளை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினோம்.
இந்த சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நாடு முழுவதும் புதிதாக 1.5 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களையும், 22 லட்சம் செல்போன் வாடிக்கையாளர்களையும் பெற்று இருக்கிறோம்.தமிழ்நாட்டில் 56 ஆயிரம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம். நவம்பர் 8-ந் தேதிக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக நாங்களும் பி.எஸ்.என்.எல். ‘பில்’ தொகையை செலுத்த ‘சுவைப் மெஷினை’ வினியோகித்து வருகிறோம்.‘மோடி கேஷ்’ என்ற ‘மொபைல் வாலட்’ ஸ்மார்ட் போன்களில் மட்டுமல்லாது, சாதாரண மொபைல் போன்களிலும் உபயோகப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. தொலை தொடர்பு கோபுரங்கள் பகிர்ந்தளித்தல் மூலம் ரூ.222 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது. இதில் 8 சதவீதம் தொலை தொடர்பு உரிமத்துக்கு வரி கட்ட வேண்டி இருப்பதால் சில நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது.
அதுவே தொலை தொடர்பு கோபுரங்களை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் மூலம் தனியாக தொழிற்சாலை அமைத்து தயாரிக்கும் திட்டம் குறித்து மத்திய அமைச்சகத்திடம் பேசினோம். இந்த பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்கள் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதை காரணமாக வைத்து தனியார் நிறுவனமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மாற்றிவிடுவார்கள் என்று அவர்கள் அச்சம் காட்டுகின்றனர். ஊழியர்களிடம் கலந்தாலோசித்து பேசி இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
‘பி.எஸ்.என்.எல். 4ஜி’ அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? என்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அனுபம் ஸ்ரீவஸ்தவா, ‘அடிப்படை கட்டமைப்பு வசதி, பொருளாதார பிரச்சினை காரணமாக தான் காலதாமதம் ஏற்படுகிறது. வை-பை, ‘ஹாட் ஸ்பாட்’ மூலம் ‘4ஜி’ சேவையை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறோம். 2018-ம் ஆண்டுக்குள் ‘4ஜி’ சேவையை முழுவதுமாக வழங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.