எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பி.எஸ்.என்.எல். 4ஜி அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? என்று பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா விளக்கம் அளித்தார்.
பி.எஸ்.என்.எல்.லில் 144 ரூபாய் புதிய சிம் கார்டு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அண்ணாசாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கி புதிய சிம் கார்டை அறிமுகம் செய்துவைத்தார்.இதில், தமிழக தொலைபேசி வட்ட தலைமை பொது மேலாளர் பூங்குழலி, சென்னை தொலைபேசி வட்ட தலைமை பொது மேலாளர் கலாவதி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் தொலை தொடர்பு நிறுவனங்களில் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது பி.எஸ்.என்.எல். தான். சமீபத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ‘வார்தா’ புயல் சூறையாடியது. அந்த சமயத்தில் பிற தொலை தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் பி.எஸ்.என்.எல். ஒருவரையொருவர் தொடர்புகொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்ததை பார்க்க முடிந்தது.பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2002-2006-ம் ஆண்டுகளில் அதிநவீன வளர்ச்சி காரணமாக 2006-ம் ஆண்டில் முதல் இடத்தை பிடித்தது. அதன்பின்னர், 2006-2012 வரை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. இதனால் வருவாய் ரீதியாக பெரும் பின்னடவை சந்திக்க நேர்ந்தது.2012-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு புதிய சேவைகளை கொண்டுவந்து முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். தற்போது 30 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்களை வைத்து இருக்கும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். தான்.
மேலும் 15 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.சில ஆண்டுகளாக சிறப்பான சேவைகள் மூலம் கொஞ்சம் லாபம் கிடைத்து இருக்கிறது. பல்வேறு விரிவாக்க பணிகள், புது சேவைகள், இழப்புகளை தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் 2018-2019-ம் ஆண்டில் எங்களுடைய நிகர லாபத்தை அதிகரிக்க திட்டம் தீட்டி இருக்கிறோம்.
தற்போதுள்ள சூழ்நிலையில் தொலை தொடர்பு துறையில் பல்வேறு விதமான போட்டிகள் நிறைந்துள்ளன. பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாக 270 டெரா பைட்சில் இருந்து 340 டெரா பைட்ஸ் அளவுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்யும் வகையில் சேவைகளை விரிவாக்கம் செய்து இருக்கிறோம்.தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாக பல்வேறு சிறப்பு சலுகைகளை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினோம்.
இந்த சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நாடு முழுவதும் புதிதாக 1.5 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களையும், 22 லட்சம் செல்போன் வாடிக்கையாளர்களையும் பெற்று இருக்கிறோம்.தமிழ்நாட்டில் 56 ஆயிரம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம். நவம்பர் 8-ந் தேதிக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக நாங்களும் பி.எஸ்.என்.எல். ‘பில்’ தொகையை செலுத்த ‘சுவைப் மெஷினை’ வினியோகித்து வருகிறோம்.‘மோடி கேஷ்’ என்ற ‘மொபைல் வாலட்’ ஸ்மார்ட் போன்களில் மட்டுமல்லாது, சாதாரண மொபைல் போன்களிலும் உபயோகப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. தொலை தொடர்பு கோபுரங்கள் பகிர்ந்தளித்தல் மூலம் ரூ.222 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது. இதில் 8 சதவீதம் தொலை தொடர்பு உரிமத்துக்கு வரி கட்ட வேண்டி இருப்பதால் சில நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது.
அதுவே தொலை தொடர்பு கோபுரங்களை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் மூலம் தனியாக தொழிற்சாலை அமைத்து தயாரிக்கும் திட்டம் குறித்து மத்திய அமைச்சகத்திடம் பேசினோம். இந்த பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்கள் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதை காரணமாக வைத்து தனியார் நிறுவனமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மாற்றிவிடுவார்கள் என்று அவர்கள் அச்சம் காட்டுகின்றனர். ஊழியர்களிடம் கலந்தாலோசித்து பேசி இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
‘பி.எஸ்.என்.எல். 4ஜி’ அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? என்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அனுபம் ஸ்ரீவஸ்தவா, ‘அடிப்படை கட்டமைப்பு வசதி, பொருளாதார பிரச்சினை காரணமாக தான் காலதாமதம் ஏற்படுகிறது. வை-பை, ‘ஹாட் ஸ்பாட்’ மூலம் ‘4ஜி’ சேவையை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறோம். 2018-ம் ஆண்டுக்குள் ‘4ஜி’ சேவையை முழுவதுமாக வழங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.