எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பி.எஸ்.என்.எல். 4ஜி அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? என்று பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா விளக்கம் அளித்தார்.
பி.எஸ்.என்.எல்.லில் 144 ரூபாய் புதிய சிம் கார்டு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அண்ணாசாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கி புதிய சிம் கார்டை அறிமுகம் செய்துவைத்தார்.இதில், தமிழக தொலைபேசி வட்ட தலைமை பொது மேலாளர் பூங்குழலி, சென்னை தொலைபேசி வட்ட தலைமை பொது மேலாளர் கலாவதி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் தொலை தொடர்பு நிறுவனங்களில் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது பி.எஸ்.என்.எல். தான். சமீபத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ‘வார்தா’ புயல் சூறையாடியது. அந்த சமயத்தில் பிற தொலை தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் பி.எஸ்.என்.எல். ஒருவரையொருவர் தொடர்புகொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்ததை பார்க்க முடிந்தது.பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2002-2006-ம் ஆண்டுகளில் அதிநவீன வளர்ச்சி காரணமாக 2006-ம் ஆண்டில் முதல் இடத்தை பிடித்தது. அதன்பின்னர், 2006-2012 வரை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. இதனால் வருவாய் ரீதியாக பெரும் பின்னடவை சந்திக்க நேர்ந்தது.2012-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு புதிய சேவைகளை கொண்டுவந்து முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். தற்போது 30 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்களை வைத்து இருக்கும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். தான்.
மேலும் 15 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.சில ஆண்டுகளாக சிறப்பான சேவைகள் மூலம் கொஞ்சம் லாபம் கிடைத்து இருக்கிறது. பல்வேறு விரிவாக்க பணிகள், புது சேவைகள், இழப்புகளை தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் 2018-2019-ம் ஆண்டில் எங்களுடைய நிகர லாபத்தை அதிகரிக்க திட்டம் தீட்டி இருக்கிறோம்.
தற்போதுள்ள சூழ்நிலையில் தொலை தொடர்பு துறையில் பல்வேறு விதமான போட்டிகள் நிறைந்துள்ளன. பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாக 270 டெரா பைட்சில் இருந்து 340 டெரா பைட்ஸ் அளவுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்யும் வகையில் சேவைகளை விரிவாக்கம் செய்து இருக்கிறோம்.தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாக பல்வேறு சிறப்பு சலுகைகளை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினோம்.
இந்த சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நாடு முழுவதும் புதிதாக 1.5 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களையும், 22 லட்சம் செல்போன் வாடிக்கையாளர்களையும் பெற்று இருக்கிறோம்.தமிழ்நாட்டில் 56 ஆயிரம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம். நவம்பர் 8-ந் தேதிக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக நாங்களும் பி.எஸ்.என்.எல். ‘பில்’ தொகையை செலுத்த ‘சுவைப் மெஷினை’ வினியோகித்து வருகிறோம்.‘மோடி கேஷ்’ என்ற ‘மொபைல் வாலட்’ ஸ்மார்ட் போன்களில் மட்டுமல்லாது, சாதாரண மொபைல் போன்களிலும் உபயோகப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. தொலை தொடர்பு கோபுரங்கள் பகிர்ந்தளித்தல் மூலம் ரூ.222 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது. இதில் 8 சதவீதம் தொலை தொடர்பு உரிமத்துக்கு வரி கட்ட வேண்டி இருப்பதால் சில நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது.
அதுவே தொலை தொடர்பு கோபுரங்களை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் மூலம் தனியாக தொழிற்சாலை அமைத்து தயாரிக்கும் திட்டம் குறித்து மத்திய அமைச்சகத்திடம் பேசினோம். இந்த பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்கள் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதை காரணமாக வைத்து தனியார் நிறுவனமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மாற்றிவிடுவார்கள் என்று அவர்கள் அச்சம் காட்டுகின்றனர். ஊழியர்களிடம் கலந்தாலோசித்து பேசி இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
‘பி.எஸ்.என்.எல். 4ஜி’ அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? என்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அனுபம் ஸ்ரீவஸ்தவா, ‘அடிப்படை கட்டமைப்பு வசதி, பொருளாதார பிரச்சினை காரணமாக தான் காலதாமதம் ஏற்படுகிறது. வை-பை, ‘ஹாட் ஸ்பாட்’ மூலம் ‘4ஜி’ சேவையை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறோம். 2018-ம் ஆண்டுக்குள் ‘4ஜி’ சேவையை முழுவதுமாக வழங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
23 Apr 2024சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையில் சோதனை மேலும் தீவிரம்
23 Apr 2024சென்னை, கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் எல்லைப்பகுதிகளில் மேலும் சோதனையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சென்னை ஏரிகளில் நீர் இருப்பு பாதியாக சரிவு
23 Apr 2024சென்னை, கோடைகாலம் தொடங்கிய நிலையில், சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிந்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது