முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் உள் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடாது : வெங்கய்ய நாயுடு பேட்டி

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  - ஓ. பன்னீர்செல்வம்  முதல்வரானதில் பாரதிய ஜனதா  தலையிடவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக  நேற்று சென்னை கமலாலயத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  ''ஓ. பன்னீர்செல்வம்   முதல்வரானதில் பாஜக தலையீடில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் வைத்த கோரிக்கையின்படி ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார்.

தமிழக அரசின் உள் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடாது. பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது. உணவுப் பாதுகாப்பு சட்டத்தை ஆரம்பத்தில் தமிழகம் எதிர்த்தது. தற்போது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் தேவையை உணர்ந்து தமிழகம் ஆதரவு அளித்துள்ளது. உடல்நிலை தேறிவந்த நிலையில் ஜெயலலிதா திடீரென மரணமடைந்ததாக மருத்துவர்கள் கூறினர். இப்போது ஜெயலலிதாவின் மரணம் குறித்து விவாதிக்கத் தேவையில்லை'' என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்