முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.23 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல் வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டாமாற்றுதிறனாளிகளுக்கு உதவி முதியோர் உதவித் தொகை காவல்துறை பாதுகாப்பு மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 280 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இம்மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.10,000 மதிப்பிலான உருப்பெருக்கியும், 1 பயனாளிக்கு ரூ.5,400 மதிப்பிலான சக்கர நாற்காலியும் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2016ஆம் ஆண்டு மார்ச்ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் பாடவாரி முதன்மை மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடர்பழங்குடியினர் 2 மாணவிகளுக்கு ரூ.8,000-ற்கான பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களையும் ஆக மொத்தம் ரூ.23 ஆயிரத்து 400 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன்,  வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரமேஸ்வரி,; சமூக பாதுகாப்புத் துறை அலுவலர் செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்