முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

ஜம்மு  - ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர்  மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.  காஷ்மீரின் பூன்ச் மாவட்டம், ஷாபூர் செக்டாரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே உள்ள இந்திய பகுதிகளைக் குறிவைத்து, பாகிஸ்தான் படையினர் நேற்று காலை 9 மணிக்கு தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இந்திய வீரர்களும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். சற்று நேரத்துக்கு துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

எனினும், இதில் உயிர் சேதாரமோ, வீரர்களுக்கு காயமோ ஏற்படவில்லை.  இந்தியா-பாகிஸ்தான் இடையே 2003-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக மீறிவரும் பாகிஸ்தான், காஷ்மீர் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் குண்டுவீச்சு தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்