முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சார ரெயிலில் இருந்து விழுந்து தாய்-மகள் பலி

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      சென்னை

பழவந்தாங்கலில் நேற்று காலை மின்சார ரெயிலில் இருந்து விழுந்து தாய்-மகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஓட்டேரியை சேர்ந்தவர் சந்திரா (வயது 54). இவரது மகள் அம்பிகா (26). இவர் திருமணம் ஆகி மடிப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். புத்தாண்டையொட்டி சந்திரா, மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.நேற்று காலை இருவரும் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் நின்றனர். அவர்கள் கடற்கரையை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் ஏறினர்.அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பையை பிளாட்பார இருக்கையிலேயே மறந்து வைத்திருந்தது தெரிந்தது.இதற்குள் மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட தயாரானது. அதிர்ச்சி அடைந்த சந்திராவும், அம்பிகாவும் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றனர்.இதில் நிலைதடுமாறிய இருவரும் அடுத்தடுத்து பிளாட்பாரத்தில் விழுந்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே சந்திராவும், அம்பிகாவும் பரிதாபமாக இறந்தனர்.அவர்கள் வைத்திருந்த பையில் மருத்துவமனை சீட்டுகள் இருந்தது. ஆஸ்பத்திரிக்கு செல்ல அவர்கள் வந்தபோது ரெயிலில் இருந்து விழுந்திருந்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பற்றிய மற்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் சென்னை கடற்கரை மார்க்கத்தில் சிறிது நேரம் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்