முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலின் பொழுது கால்நடைகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூச வேண்டாம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      ஈரோடு

பொங்கலின் பொழுது கால்நடைகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூச வேண்டாம்

ஜெயம் பிராணி நல அறக்கட்டளை வேண்டுகோள்

கவுந்தப்பாடி ஜெயம் பிராணி நல அறக்கட்டளை சார்பில் ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது பொங்கல் பண்டிகையின்பொழுது சுற்றுச்சூழல் காக்க வேண்டுகிறோம். பழையன கழிதல் புதியன புகுதல் என்கிற பெயரில் துணிமணி குப்பை போன்றவைகளோடு டயர் பிளாஸ்டிக் பேப்பர் உடைந்த பிளாஸ்டிக் பாட்டில் குடம் போன்றவைகளைப் போட்டு எரிக்க வேண்டாம். அப்படி எரிக்கும் பொழுது காற்றிலே நஞ்சு கலந்து மூச்சுவிடக்கூட முடியாத நிலை உருவாவதுடன் பூமியும் வெப்பமாகிறது. சைக்கிள் டயர், பைக் மற்றும் கார்களின் டயர்களையும் டியூப்களையும், வேண்டாத பொருட்களைக் கொண்டு பிளாஸ்டிக் சாலை அமைக்கப் பயன்படுத்தலாம்.

அதே போல மாட்டுப் பொங்கலின் பொழுது கால்நடைகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு பெயிண்ட்டினால் வர்ணம் பூசி பொங்கல் வைத்து பழம் தேங்காயுடன் படையல் வைத்து கால்நடைகளுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து நைவேத்தியப் பொருட்களான பொங்கல் பழம் தேங்காய் ஊட்டி விடுவார்கள். பொங்கல் மற்றும் பழம் தேங்காய்களை பெயரளவிற்கு கொஞ்சம் மட்டுமே ஊட்டி விட வேண்டும். அளவிற்கதிகமாக ஊட்டி விடும்பொழுது செரிமானம் ஆகாமல் அசை போடமுடியாமல் தவிக்கிறது. அது மட்டுமல்ல செரிமானம் ஆகாத காரணத்தால் வயிற்றில் நச்சுத்தன்மை (வுழஒநஅநய) பரவி சில சமயங்களில் இறந்து விடவும் வாய்ப்பிருக்கிறது.

அதே போல கால்நடைகளின் கொம்புகளைகூரிய ஆய்தம் கொண்டு சீவி விட்டு பெயிண்டுகளைப் பயன்படுத்தி வர்ணம் பூசுகின்றனர். பாரம்பரியமாக கொம்புகளுக்கு விளக்கெண்ணெய் பூசி வந்தார்கள் பொங்கல் பண்டிகையின் பொழுது கொம்புகளுக்கு சுண்ணாம்பு ஒரு பக்கமும் காவிக்கல் மண் ஒரு பக்கமும் பூசி வந்தார்கள்.

நாகரீகம் என்கிற பெயரில் பார்க்க அழகாகத் தோன்றுகின்ற காரணத்தால் பெயிண்டால் கொம்புகளுக்கு வர்ணம் பூசி வருகிறாhர்கள். இப்படி கொம்புகளுக்கு பெயிண்ட் பூசி விடுவதனால் சூரிய சக்தியை கிரகிக்கும் தன்மையை இழந்து விடுகிறது. சூரிய வெளிச்சம் கொம்புகளில் படும்பொழுது அதன் மூலம் சக்தியைப் பெறுவதுடன் உடலுக்கு கிடைக்க வேண்டிய விட்டதன் “டி” யும் கிடைக்காமல் போய்விடுகிறது. விட்டமின் டி தான். கால்நடைகள் சாப்பிடும் தவிடு பருத்திக்கொட்டை, பசுந்தீவனம் உலர்தீவன உணவில் உள்ள கால்சியத்தை  கால்சியம் பாஸ்பேட்டாக மாற்றி சக்தி அளிக்கிறது.

எப்படி ஆண்டனா ஒலி அலைகளை உள்வாங்கி நமக்கு படமாகவோ பேச்சாகவோ மாற்றித் தருகிறதோ அதே போல் வலிமையடைகிற கொம்பு ஆண்டனா போல் செயல்பட்டு சக்தியை உள் வாங்கி உடலுக்கு அளிக்கிறது நாம் கால்நடைகளுக்கு பெயிண்ட அடிக்கும்பொழுது சூரிய ஒளியில் சக்தியை கிரகிக்கும் தன்மையை இழந்து விடுகிறது. ஆகவே கால்நடைகளுக்கு சுண்ணாம்பு அல்லது காவிக்கல் மண் மட்டுமே பூச வேண்டும்.

கொம்புகளில் உள்ள வெடிப்புகள் மற்றும் கூரிய ஆயுதம் கொண்டு சீவும் பொழுது ஏற்படும் காயங்கள் மூலமாக பெயிண்ட் சென்று செப்டிக் ஆகி சீழ் பிடிக்கவும் ஏதுவாகிறது. சில சமயங்களில்  கொம்புகளையே அகற்ற வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது. ஆகவே கொம்புகளுக்கு பெயிண்ட் பூச வேண்டாம் என்றும் ஜெயம் பிராணி நல அறக்கட்டளை கேட்டுக்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்