முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுத்திமலையில் மான்களை வேட்டையாடிய 10 பேர் கும்பல் தப்பியோட்டம்:3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்திமலை காப்புக்காடு பகுதியில் மாவட்ட வன அலுவலர் சுதா உத்தரவின்பேரில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு விலங்குகளை வேட்டையாடிய 10 பேர் கொண்ட கும்பலை கண்டு விரட்டினர். அபபோது அவர்களிடமிருந்த 3 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வேட்டையாடிய 2 மான்களின் இறைச்சிகள், டார்ச் லைட் உள்ளிட்டவைகளை வீசிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. நீண்ட தூரம் விரட்டியும் யாரும் சிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து நாட்டு துப்பாக்கிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இறந்த மான்களை அடக்கம் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஜவ்வாதுமலை பகுதியினர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்ய ஜவ்வாதுமலை பகுதிக்கு வனத்துறையினர் விரைந்துள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்