முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரவாயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 4 பேர் கைது

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      சென்னை

சென்னை, மதுரவாயல், கார்த்திக்கேயன் நகர், ஏஎஸ்ஏ தெருவில், வசிக்கும் வில்சன் (57), என்பவர் கடந்த 03.01.2017 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் அவரது வீட்டின் முன்பு அவரது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டிருந்தனர். இதே போல அன்றைய தினமே இரவு 07.00 மணியளவில் அதே பகுதியில் வசிக்கும் கதிர்வேல் என்ற முகவரியில் என்பவரின் ஹோண்டா ஷைன் வாகனத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டிருந்தனர்.மேற்படி 2 சம்பவங்கள் குறித்தும், வில்சன் மற்றும் கதிர்வேல் ஆகியோர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், மேற்படி இருசக்கர வாகனங்களை திருடிய குற்றவாளிகளை பிடிக்க மதுரவாயல் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தனிப்படையினர் நேற்று முன் தீனம் இரவு, மதுரவாயல் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, மேற்படி கதிர்வேலின் திருடுப் போன இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது. அதன் பேரில் இரண்டு நபர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ரூபன் (எ) ரூபன்ராஜ் (22), வில்லிவாக்கம் மற்றும் வசந்த் சுமன் (19), பன்னீர் செல்வம்,பெரம்பூர், என்பதும், இருவரும் சேர்ந்து மேற்படி வில்சன், கதிர்வேல் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் உட்பட மதுரவாயல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தனியாக நிறுத்தியிருக்கும் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. மேலும், இவர்கள் திருடிய இருசக்கர வாகனங்களை அவர்களது கூட்டாளிகள் அந்தோணிராஜ் மற்றும் ஈசாக் ஆகியோர் உதவியுடன் விற்றது தெரியவந்தது. கொடுத்த தகவலின்பேரில், அந்தோணிராஜ் (31), பெரம்பூர், சென்னை மற்றும் ஈசாக் (29), மதுரவாயல், ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மேற்படி 4 குற்றவாளிகளிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட அந்தோணிராஜ் மீது செம்பியம் மற்றும் கிண்டி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும், ஈசாக் மதுரவாயல் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்