முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை கிரிவலப் பாதையில் கனடா நாட்டு காதல் ஜோடி:தமிழ் கலாச்சார முறையில் திருமணம்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை: கனடா நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடி திருமணம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ளஒரு நட்சத்திர ஹோட்டலில் தமிழ் கலாச்சார முறைப்படி நடந்தது. கனடா நாட்டைச் சேர்ந்தவர் பிலிப் (54), இவர் பல்வேறு நாடுகளில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அதே நாட்டைச் சேர்ந்த பாராஹா (47) என்ற பெண்ணும் சுற்றுலா சென்றுள்ளார். 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகிய இவர்களிடையே காதல் மலர்ந்தது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொண்ட இவர்களுக்கு தமிழ் கலாச்சாரம் பிடித்து போயிற்று. இங்குள்ள திருமண சடங்குகள் இவர்களை ஈர்த்தது. இதனையடுத்து தமிழ்க்கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்த இவர்கள் தங்கள் நாட்டுக்கு கடந்த ஜனவரி மாதம் சென்றனர். அங்கு அவர்களது நாட்டு முறைப்படி நிச்சயதார்ததம் செய்து கொண்டனர். பின்னர் இந்தியா வந்த இவர்கள் திருவண்ணாமலையை வந்தடைந்தனர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கிய இவர்கள் வெள்ளியன்று ஜனவரி 6ந் தேதி அன்று தமிழ்க்கலாச்சார முறைப்படி திருமணம் செய்யப்போவதாக முன்பதிவு செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ் முறைப்படி திருமண அழைப்பிதழையும் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கினர். இந்நிலையில் முன்பதிவு செய்து கொண்டபடி (வெள்ளியன்று) மாலை இவர்களது திருமணம் கிரிவலப் பாதையிலுள்ள அதே நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. மணமகள் பாராஹா பட்டுபுடவை அணிந்திருந்தார். மணமகன் பிலிப் வேட்டி - சட்டை அணிந்திருந்தார். வேதமந்திரங்கள் ஓத தமிழ்முறைப்படி பாராஹாவின் கழுத்தில் பிலிப் (மஞ்சள் கயிறுடன் கூடிய) தாலி கட்டினார். மாலை மாற்றிக்கொண்ட அவர்கள் அக்னி வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து பாராஹாவிற்கு, பிலிப் மெட்டி அணிவித்தார். திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர். அனைவருக்கும் அறுசுவ¬யுடன் கூடிய திருமண விருந்து வழங்கப்பட்டது. திருமண வாழ்த்து குறித்து மணமகள் பாராஹா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தபோது தமிழக மக்களின் பாரம்பரிய கலாச்சாரத்தால் நெகிழ்ந்து போனேன். இங்கு நடந்த திருமணம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. சுற்றுலா சென்றதால் உரிய திருமண வயதை நாங்கள் கடந்துவிட்டோம். எனினும் இருக்கிற காலததிலாவது தம்பதியாக வாழ்வோம் என முடிவு செய்தோம். தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்த நான் என் விருப்பத்தை பிலிப்பிடம் தெரிவித்தேன். அவரும் சம்மதித்தார். இதனை யடுத்து எங்கள் நாட்டுக்கு சென்று முறைப்படி நிச்சயதார்த்ததம் செய்த நாங்கள், மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி திருவண்ணாமலைக்கு வநதோம். இதையடுத்து எங்கள் திருமணம் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரப்படி இனிதாக நிறைவேறியது. இந்த தருணம் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத தருணம் என்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago