முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுர் மாவட்ட கலெக்டரிடம் திருவாலங்காடு ஊராட்சி கழக செயலாளர் கோரிக்கை மனு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      திருவள்ளூர்

திருவள்ளுர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 21.12.2016 தேதி அங்கன்வாடி மைய சிறு பழுதுகள்,அங்கன்வாடி மைய பெரிய டெண்டர்கள் விடப்பட்டது.டெண்டரில் ஒப்பந்ததாரர்கள் வராமலேயே ஒப்பந்ததாரர் போல் போலி கையொப்பமிட்டு பத்து சதவிகிதம் கமிஷன் பெற்றுக் கொண்டு கமிஷன் கொடுத்தவர்களுக்கு மட்டும் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. என்.சக்திவேல் என்பவர் அன்று ரூ.180000 வசூலித்து கொண்டு இவர்களுக்கு வேலை கொடு என்று சொல்லிவிட்டார். ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெற்று கொண்டு முதலில் இவருக்கு காசோலை வழங்குங்கள்.இவரது ஊழலுக்கு துணை போகாத திருவாலங்காடு ஊராட்சி செயலர் சத்தியநாதனை மாற்றி அவருக்கு பதில் மனோகரன் எனபவரை ஊராட்சி செயலாளராக வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ராஜேந்திரன் மாற்றியுள்ளார்..எனவே என்.சக்திவேல் என்பவரால் நடத்தப்பட்ட இந்த ஊழல் டெண்டரை மாற்றி வேறொரு தேதியில் ஊழல் இல்லாத டெண்டர் நடத்த ஆவண செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் திருவாலங்காடு ஊராட்சி கழக செயலாளர் அனல்சேகர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்