முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாம் பஜார் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      சென்னை

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையர் ஜார்ஜ், உத்தரவிட்டதன்பேரில், அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று முன் தீனம் மாலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின்பேரில், எண்.106 பாரதி சாலை, ஜாம்பஜார், சென்னை என்ற முகவரியிலுள்ள வீட்டை கண்காணித்தபோது, அங்கு சிலர் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜனார்த்தனன் (27), மற்றும் ஜெகதீஷ் (28), ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்ற நபர்கள் தப்பியோடிவிட்டனர். மேற்படி இடத்திலிருந்து பணம் ரூ.3,900/- மற்றும் சீட்டுககட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்