முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோரை இழந்த சிறுவன் அரசு காப்பகத்தில் சேர்ப்பு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோட்டில், பெற்றோரை இழந்த சிறுவன், அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தயாளன், 10 இவர் தாயார் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தனது தந்தையுடன் கருங்கல்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன், தந்தை மாயமானார். அப்பகுதியில் வசித்த மூதாட்டி, சிறுவனை தன்னோடு அழைத்து உணவு வழங்கி, தங்க வைத்தார். கருங்கல்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், சேர்த்து, 5ம் வகுப்பு படிக்க வைத்தார். பள்ளி ஆசிரியர்கள், இச்சிறுவனின் நிலை அறிந்து, ஈரோடு ‘சைல்டு லைன்’ எண், 1098 க்கு அழைத்து, விபரம் தெரிவித்தனர். ‘சைல்டு லைன்’ ஒருங்கிணைப்பாளர் ஜெகன், அலுவலர் ரமேஷ் ஆகியோர், சிறுவன் தயாளனை மீட்டு, ஈரோடு கொல்லக்கடை மேட்டில் உள்ள, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். அங்கிருந்தபடி, கருங்கல் பாளையம் பள்ளிக்கு வந்து படித்து செல்கிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்