எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி ஆலயத்தில் நேற்று அதிகாலை, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம் : 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி ஆலயத்தில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து திருமொழி, இராப்பத்து திருவாய்மொழி என கொண்டாடப்படுகிறது. பகல்பத்து திருமொழி நிறைவுற்று, வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது. விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், ரத்தின அங்கி அணிந்து, சொர்க்கவாசல் கதவு திறந்து சென்றார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கட்டணமில்லா பஸ் சேவை : சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி, பக்தர்களின் வசதிக்காக திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், சிறப்பு கட்டணமில்லா பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கிவைத்தனர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, மாம்பழச்சாலை, அம்மா மண்டபம் வழியாக ஸ்ரீரங்கம் செல்லும் இப்பேருந்துகள், இரவு வரை இயக்கப்பட்டன. சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலிலும் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாகச் சென்று, பார்த்தசாரதி சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ் வில்லிபுத்தூர் : 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ் வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பெரிய பெருமாள் தோளுக்கினியானிலும், ஆண்டாள் ரெங்கம்மன்னார் சேர்த்தியிலும் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா முழக்கமிட்டு இறைவனை வழிபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் : கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதி சாரத்தில் உள்ள திருவாழிமார்பன் கோயிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று பறக்கை மதுசூதனபெருமாள் கோயில் வடிவீஸ்வரம் இடது தீர்த்த பெருமாள் கோயில் உள்ளிட்ட ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
வேதாரண்யம் அபீஷ்ட வரதராஜ பெருமாள் : நாகை மாவட்டம் வேதாரண்யம் அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து சுவாமி ஸ்ரீ்தேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் : கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயில்: தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதிக்கரையில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்புவாசல் நடைபெற்றது. பின்னர் சயன கோலத்தில் எழுந்தருளிய சுவாமி அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல், பனதிருப்பதி சீனிவாச பெருமாள் கோயிலிலும் சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் : காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,