முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்பு பணத்துக்கு துதிபாடும் எதிர்க்கட்சிகள் - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : சில அரசியல் வாதிகள் கறுப்பு பணத்துக்கு துதிபாடுபவர்களாக உள்ளனர் என்று பிரதமர் மோடி பெங்களூருவில் நடந்த  வெளி நாட்டு வாழ் இந்தியர்கள்  மாநாட்டில்  குற்றம் சாட்டினார்.

இந்தியர்கள் மாநாடு

பெங்களூருவில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பங்கேற்கும் பிரவசி பாரதிய திவஸ் மாநாடு நேற்று  கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மக்களுக்கு விரோதமானது என்று சில நபர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு துதி பாடும் நபர்கள். இந்த தீமைகள் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்பதால் அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சில அரசியல் கட்சிகள் கறுப்பு பணத்திற்கு துதி பாடுவது துரதிர்ஷ்டவசமானது.

பாஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) அரசு கறுப்புப்பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக உறுதியான பெரும் போராட்டத்தை துவக்கியுள்ளது. இந்த கறுப்பு பணமும், ஊழலும் நிர்வாகத்தையும், சமூகத்தையும்  சீர் குலைக்கும் விஷயங்கள் . இதனை களையெடுக்கவே அரசு தற்போது பழைய ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற முடிவை அறிவித்துள்ளது.

நல்ல வளர்ச்சி

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களால் நமது தேசம் நல்ல  வளர்ச்சியை பெற்றுள்ளது. அவர்கள் ஒப்பற்ற பங்களிப்பை நாட்டிற்கு அளித்துள்ளனர். அவர்கள் இந்திய பொருளாதாரத்தில்  6900 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளனர். வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த விழாவில் இந்தியா வம்சாவளியைச்சேர்ந்த போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா உள்பட பல மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள்  ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

பெங்களூருவில் நடக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு இன்று (திங்கள் ) முடிவடைகிறது. இந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு  பிரவசி பாரதிய திவஸ் விருதுகளை அளிக்கிறார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியுடன் பிரவசி பாரதிய திவஸ் மாநாடு நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago