முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாழங்குனம் கிராமத்தில் வரும் 25ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும் வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் தகவல்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      விழுப்புரம்

விழுப்புரம்

 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் தாழங்குணம் கிராமத்தில் வரும் 25ம் தேதி (புதன்கிழமை) மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் தலைமையில் நடைபெறும்.இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் மேலும் தெரிவித்துள்ளதாவது:ஜனவரி 2017ம் மாதத்தின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வருகின்ற 25.01.2017ஆம் தேதி மேல்மலையனூர் வட்டம் தாழங்குனம் கிராமத்தில் நடைபெற உள்ளது.எனவே, அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வரும் 25ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கை மனுக்களை முன்னதாகவே அளித்து, பயனடைய வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்