முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிநவீன ஏவுகணையை செலுத்த தயாராகும் வடகொரியா ! சுட்டு வீழ்த்துவோம் என அமெரிக்கா எச்சரிக்கை

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

பியாங்யாங்  - கண்டம்விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை எந்நேரமும் செலுத்த தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், தங்கள் பகுதிக்கு நெறுங்கி வந்தால்,  அதை சுட்டு வீழ்த்தப் போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அணு ஆயுத சோதனை
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

3 முறை சோதனை
அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு கடந்த ஆண்டுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

பொருளாதார தடை
இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. எனினும், தற்காப்பு என்ற பெயரில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது. இந்த ஏவுகணைகள் அனைத்தும் வடகொரியாவில் இருந்து சுமார் 3400 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கி அழிக்கும் ஆற்றல் படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் செப்டம்பர் மாதம்வரை ஐந்துமுறை அத்துமீறலாக ஏவுகணை சோதனைகளை இந்நாடு நடத்தியுள்ளது.

ஐ.நா. தடை
வடகொரியாவின் இந்த அத்துமீறலுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனாலும், மாதந்தோறும் ஒருமுறையோ, இருமுறையோ இந்த ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்ள வடகொரியா தவறுவதில்லை. வடகொரியாவின் இந்த ஆணவத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையை பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. இதன் அடிப்படையில் வடகொரியா மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய தடைகளை விதித்துள்ளது.

நெடுந்தூர ஏவுகணைகள்
இதற்கிடையில், கடந்த முதல் தேதி புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தடை செய்யப்பட்ட நெடுந்தூர ஏவுகணைகளை தயாரிக்கும் பணிகள் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். அமெரிக்காவை தாக்கும் நோக்கத்தில்தான் இதைப்போன்ற நெடுந்தூர ஏவுகணைகளை வடகொரியா தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரன நிலையில்...
இந்நிலையில், எந்த நேரத்திலும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டால் எந்த இடத்திலிருந்தும் உடனடியாக செலுத்தும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து செல்லும் ஏவுகணை சோதனைக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கொரியா அரசின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த மிரட்டல் தொடர்பாக, நேற்று முன்தினம் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஆஷ் கார்ட்டரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சுட்டு வீழ்த்துவோம்
இதற்கு பதிலளித்த ஆஷ் கார்ட்டர், வடகொரியாவின் நெடுந்தூர ஏவுகணகள் மற்றும் அணு ஆயுதங்களை தயாரிக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருவதாக குறிப்பிட்டார். நமது நாட்டிற்குட்பட்ட பகுதி மற்றும் நமது நட்பு நாடுகளுக்கு உட்பட்ட பகுதியை வடகொரியாவின் ஏவுகணைகள் நெருங்கினால் அவற்றை சுட்டு வீழ்த்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago