முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்லரம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி,சேலை வழங்கும் விழா:

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      திருவள்ளூர்
Image Unavailable

 

 

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி,சேலைகள் திருவள்ளுர் ஒன்றியம் புல்லரம்பாக்கம் ஊராட்சியில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் டி.ஏ.ஏழுமலை பொதுமக்களுக்கு வழங்கினார்.ஏழை,எளிய தமிழக மக்கள் தமிழக பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையன்று புத்தாடை உடுத்த வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கிய வேட்டி,சேலைகளை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் டி.ஏ.ஏழுமலை குடும்ப அட்டை உள்ள பயனாளிகளுக்கு வழங்கினார்.அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு பொதுமக்களும் தங்கள் பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுப்பொருட்கள் ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை,முந்திரி, திராட்சை,ஏலக்காய்,இரண்டு அடி நீள கரும்பு துண்டு,வேட்டி,சேலைகளை பெற்று பயன்பெற வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில் திருவள்ளுர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.சந்திரசேகர்,ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்விமோகனசுந்தரம்,ஒன்றிய கழக முன்னாள் துணை தலைவர் ஏ.பி.கேசவன்,கழக நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் செல்வராணி ஜான்,தங்காளி,சிட்டிபாபு, முனிரத்தினம்,தாஸ், சிக்கந்தர்,பி.ரவி,ராமலிங்கம், சங்கர்,புத்தமணி,தங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்