முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது.

 

குடும்ப அட்டை

 

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 07 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 201 என மொத்தம் 208 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் வேளாங்கண்ணி, கிறிஸ்துராஜா காதுகேளாதோருக்கான சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேருக்கு தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.80,000 மதிப்பிலான காதுக்குப் பின் அணியும் காதொலி கருவிகளை மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர்(சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ.தேன்மொழி, மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்