முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 459 மனுக்கள் பெறப்பட்டது : கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் நேற்று (09.01.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 459 மனுக்கள் பெறப்பட்டது என மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தெரிவித்துள்ளார்.

 

நலிந்தோர் நலத்திட்டம்

 

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று (09.01.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.

11 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிக்களுக்கான உதவித் தொகையும், 2 நபர்களுக்கு நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 9 நபர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகையும், திருமண உதவித் தொகையையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும்; நிலம் தொடர்பான 94 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 24 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை கோரி 69 மனுக்களும், சத்துணவு அமைப்பாளர் மற்றும் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 40மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 63 மனுக்களும், மற்றும் 99 இதர மனுக்கள் என மொத்தம் 459 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்