முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்: 'விருமாண்டி' கமல்ஹாசன் போர்க்குரல்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      சினிமா
Image Unavailable

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதானால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள் என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் மீண்டும் குரல் எழுப்பியுள்ளார்.

பிரபல ஆங்கில ஊடகமான ‘இந்தியா டுடே’ சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கியது. பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுவரும் இந்த கருத்தரங்கில் இன்று நடிகர் கமல்ஹாசன் தனது கலையுலக பயணம் தொடர்பாக பேசினார்.பின்னர், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என பெருகிவரும் ஆதரவுக் குரல் தொடர்பாக தலைமை செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழர்களின் பாரம்பரிய மரபுசார்ந்த வாழ்க்கையில் இடம்பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 'ஏறுதழுவுதல்' என்றழைகப்பட்டது. ஏறுதழுவுதல், அதாவது காளைகளை அணைத்துப் பிடித்தல் என்ற இந்தப் போட்டியின் நேரடி பொருளை காயப்படுத்துதல் என நாம் தவறாக புரிந்துகொள்ள கூடாது என்று குறிப்பிட்டார்.

ஆனால், இந்த விளையாட்டில் காளைகளுக்கு காயம் ஏற்படுகிறது, அடிபட்டு ரத்தம் வடிகிறது என்றெல்லாம் பிராணிகள் வதை சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகிறார்களே.., என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அப்படியானால் பிரியாணிக்கும் நாம் தடை விதிக்க வேண்டும் என்றார். ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நேரிடையாக பதிலளித்த கமல்ஹாசன், நிச்சயமாக, அது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்தார்.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு, அவை மனிதர்களுடன் உணர்வுபூர்வமாக உறவாடுகிறது. அவற்றுக்கும் வலியை அறியும் உணர்ச்சி உள்ளது என்று தாவரவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் தெரிவித்திருந்தார் என்பதற்காக நாம் எலுமிச்சை பழத்தை வெட்டாமல் இருந்து விட்டோமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால், ஜல்லிக்கட்டின்போது காளைகள் காயப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.. என்ற நிருபரை இடைமறித்த கமல்ஹாசன், ஆம், எனக்கு தெரியும். நான் ஜல்லிக்கட்டில் விளையாடி இருக்கிறேன். இந்த விளையாட்டில் இறங்கி காளையை தழுவிய வெகு குறைந்த அளவிலான நடிகர்களில் நானும் ஒருவன் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளை வெற்றி பெற்றதா? அல்லது, அதனுடன் மோதியவர் வெற்றி பெற்றாரா? என்ற பேச்சுக்கே இடமில்லை. காளையை தழுவிப்பிடித்தபடி நீங்கள் எவ்வளவு நேரம் தரையில் உருண்டு தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம்.தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் தொடர்பான நிறைய விஷயங்களை நினைவுப்படுத்தும் இந்த வீரவிளையாட்டை தமிழன் என்ற முறையில் நான் நேசிக்கிறேன், ஆதரிக்கிறேன். இந்த விளையாட்டில் காளைகள் காயப்படுத்தப்படுவதோ, வெட்டப்படுவதோ, கொல்லப்படுவதோ இல்லை. அவ்வாறு இருந்தால் இதற்கு தடை விதிக்கலாம், ஜல்லிக்கட்டு நீக்கப்படலாம்.ஆனால், காளைகள் மோதியதால் நேர்ந்த விபத்து மரணங்களைவிட, தற்போது இருசக்கர வாகன விபத்துகளால் பெருகிவரும் மரணங்களைப் பற்றியும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago