முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணத்தில் பன்றி காய்ச்சல் ஒழிப்பு துண்டு பிரசுரம் விநியோகம்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      வேலூர்
Image Unavailable

அரக்கோணம் ஆணையாளர் த.சௌந்தராஜன் தலைமையில் பல்வேறு நகர பகுதிகளில் பன்றி காய்ச்சல் ஒழிப்பு துண்டு பிரசுரம் விநியோக பிரச்சாரங்கள் நடந்தேறியது. இது குறித்து விவரம் வருமாறு.    வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில், பன்றி காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று முன் தினம் மாலை மக்கள் சந்திக்கும் முக்கிய இடங்களில் நடைபெற்றது. வேலூர் கலெக்டர் முனைவர் ராமன் உத்திரவுகளுக்கிணங்க இந்த பிரச்சாரம் நடந்து இருப்பது தெரிய வருகிறது. இதனையொட்டி அரக்கோணம் நகரத்தில் மக்களிடையே விழிப்பணர்வு எற்படுத்திட நகராட்சி ஆணையாளர் த.சௌந்தராஜன் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சுகாதார பிரிவு ஆய்;வாளர் பி.தேவராஜ், சுகாதார பணிகளின் மேற்பார்வையாளர்கள் சம்சுதீன், வனஜா, கேசவன்,     மற்றும் கூடுதல் துப்புறவு ஊழியர்களுடன் கொண்ட குழுவினர் புதிய பேருந்து நிலையம், அரக்கோணம் ரயில்வே நிலையம், எஸ.;ஆர்.கேட ;மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசரங்களை வழங்கியும் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்