முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் முகவரி கேட்பதுபோல் நடித்து 3 சவரன் அபேஸ்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை தேனிமலை பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் தனகோட்டி (74) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள பிள்ளையார் கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு மர்ம ஆசாமி தனக்கோட்டியிடம் ஒரு டாக்டர் பெயரை கூறி முகவரி கேட்டுள்ளார். அவருக்கு தனகோட்டி முகவரியை கூறியுள்ளார். ஆனால் அந்த மர்ம ஆசாமி முகவரி சரியாக தெரியவிலலை பைக்கில் வந்து காட்டும்படி கூறி தனக்கோட்டியை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். டாக்டர் வீட்டின் அருகே சென்றபோது தனக்கோட்டிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மர்ம ஆசாமி தனக்கோட்டியை அங்கேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த தனக்கோட்டி தனது கழுத்தில் இருந்த 3 சவரன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். முகவரி கேட்பது போல் நடித்து செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தனக்கோட்டி திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல்நிலையததில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்