எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின்போது, பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் வகையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கு, உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்வதற்கான அவசரச் சட்டத்தினைப் பிறப்பிக்க, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, நேற்று பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இவ்வார இறுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாடவிருக்கும் நேரத்தில், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதற்காக, மிகுந்த முக்கியத்துவமும், அவசரமும் கொண்ட இப்பிரச்னையை பிரதமரின் பரிசீலனைக்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய விளையாட்டு
விவசாயம் சார்ந்த கலாச்சாரத்துடன் பிரிக்க முடியாத வகையில் ஜல்லிக்கட்டு அமைந்துள்ளது. பாரம்பரிய பழக்கவழக்கங்களை பாதுகாப்பதற்கும் ஜல்லிக்கட்டு உதவுகிறது. பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டாகும். இதற்கென பிரத்யேகமாக காளைகள் வளர்க்கப்படுகின்றன. குதிரைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகளைப் போல் இல்லாமல் இந்த விளையாட்டில் காளைகளுக்கு கொடுமை இழைக்கப்படுவதில்லை.
காளைகளுக்கு வழிபாடு
தமிழ்நாட்டில் தெய்வமாக காளைகளுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. காளைகளை அடக்கும் வீரர்கள், அவற்றுக்கு துன்பம் ஏற்படுத்துவதில்லை. ஜல்லிக்கட்டின் மீதான தடை, பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என பொதுச்செயலாளர் சசிகலா, பிரமதரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முக்கிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதில், எனது ஆசான் ஜெயலலிதா, மிகவும் ஆர்வமாக இருந்தார் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குவதற்கான அறிவிப்பினை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மிகத் தெளிவாக வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு, உரிய நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து பரவலாக அதிருப்தி நிலவுவதால், இது தனது மனப்பூர்வமான வேண்டுகோள் என்றும் பொதுச்செயலாளர் சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
வீரம் வெளிப்படுகிறது
காளைகளை இளைஞர்கள் அடக்கும்போது வீரம் வெளிப்படுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவது தெய்வத்தன்மை கொண்ட பாரம்பரிய உரிமை என, தமிழக இளைஞர்கள் கருதுவதால், இவ்விளையாட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வகைசெய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பதற்கு பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் மகிழ்ச்சியடைவர்
ஜல்லிக்கட்டின் மீதான தடை நீக்கப்படுவதன் மூலம், தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டுச் சிறப்புகள் பாதுகாக்கப்படும். மேலும், வரும் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்களின்போது, ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவது உறுதிப்படுத்தப்படும். ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். அத்துடன், தமிழ்நாட்டில் வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.