எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின்போது, பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் வகையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கு, உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்வதற்கான அவசரச் சட்டத்தினைப் பிறப்பிக்க, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, நேற்று பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இவ்வார இறுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாடவிருக்கும் நேரத்தில், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதற்காக, மிகுந்த முக்கியத்துவமும், அவசரமும் கொண்ட இப்பிரச்னையை பிரதமரின் பரிசீலனைக்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய விளையாட்டு
விவசாயம் சார்ந்த கலாச்சாரத்துடன் பிரிக்க முடியாத வகையில் ஜல்லிக்கட்டு அமைந்துள்ளது. பாரம்பரிய பழக்கவழக்கங்களை பாதுகாப்பதற்கும் ஜல்லிக்கட்டு உதவுகிறது. பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டாகும். இதற்கென பிரத்யேகமாக காளைகள் வளர்க்கப்படுகின்றன. குதிரைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகளைப் போல் இல்லாமல் இந்த விளையாட்டில் காளைகளுக்கு கொடுமை இழைக்கப்படுவதில்லை.
காளைகளுக்கு வழிபாடு
தமிழ்நாட்டில் தெய்வமாக காளைகளுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. காளைகளை அடக்கும் வீரர்கள், அவற்றுக்கு துன்பம் ஏற்படுத்துவதில்லை. ஜல்லிக்கட்டின் மீதான தடை, பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என பொதுச்செயலாளர் சசிகலா, பிரமதரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முக்கிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதில், எனது ஆசான் ஜெயலலிதா, மிகவும் ஆர்வமாக இருந்தார் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குவதற்கான அறிவிப்பினை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மிகத் தெளிவாக வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு, உரிய நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து பரவலாக அதிருப்தி நிலவுவதால், இது தனது மனப்பூர்வமான வேண்டுகோள் என்றும் பொதுச்செயலாளர் சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
வீரம் வெளிப்படுகிறது
காளைகளை இளைஞர்கள் அடக்கும்போது வீரம் வெளிப்படுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவது தெய்வத்தன்மை கொண்ட பாரம்பரிய உரிமை என, தமிழக இளைஞர்கள் கருதுவதால், இவ்விளையாட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வகைசெய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பதற்கு பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் மகிழ்ச்சியடைவர்
ஜல்லிக்கட்டின் மீதான தடை நீக்கப்படுவதன் மூலம், தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டுச் சிறப்புகள் பாதுகாக்கப்படும். மேலும், வரும் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்களின்போது, ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவது உறுதிப்படுத்தப்படும். ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். அத்துடன், தமிழ்நாட்டில் வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.