முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      சென்னை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ரோட்டரி சங்கம் மற்றும் துர்கா ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் கே.பெருமாள் தலைமை தாங்கினார். சாசன தலைவர் பி.கே.சுப்பிரமணி, மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் நிர்வாக அலுவலர் எஸ்.வாசு முன்னிலை வகித்தனர். செயலாளர் வி.மணிகண்டன் வரவேற்றார். மோட்டார் ஆய்வாளர் முனுசாமி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ், துர்கா ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகி டி.உமாபதி, மீனாட்சி அம்மாள் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆர்.சேகர் ,குளோபல் பள்ளி முதல்வர் எஸ். சாந்தி மீனாட்சி அம்மாள் குழுமம் மாணவர்,மாணவியருடன் புறப்பட்ட பேரணி பஜார் வீதி வழியாக ஹெல்மெட் அணிவது இஷ்டமானால் எமனின் வேலை கஷ்டமாகும் என்றும் ஹெல்மெட் அணிவதன் பலன் குறித்து கோஷமிட்டு சென்றனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் எம்.சுப்பிரமணி, பூபாலன், கே.வி.சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்